4604. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: சமயங்கள் தோறும் உட்பிரிவுகள் பலவாதலின் அவற்றைச் சேர்ந்தவர் பலரும் அடங்க, “எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும்” எனக் கூறுகின்றார். செம்பொருள் - மெய்யான பரம்பொருள். (20)
|