4902.

     எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
     சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
          சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.

உரை:

     சிவ பரம்பொருளின் ஞானத்தால் மனக்கவலை நீங்கினமை பற்றி, “தந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்” என்று இயம்புகின்றார். சித்திகள் - கன்ம யோக ஞானசித்திகள்.

     (8)