4996.

     வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
          வஞ்சவினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
     எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
          எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     வள்ளால் - அருள் வள்ளலாகிய சிவ பரம்பொருளே. வஞ்ச வினைகள் - உண்மை ஞானத்தை உணராவாறு மறைக்கும் வினைகள் தலை வணக்குதே - இ்னி உம்மைத் தொடரேம் என்று சொல்வது போலத் தலைகுனிந்து வணங்கி நீங்குகிறது. எள்ளாது - இகழாமல். நயக்குது - விரும்புகிறது. தயவு - திருவருள். வியக்குது - வியந்து போற்றுகிறது.

     (34)