5018. எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
எனக்கும் உனக்கும்
உரை: அமுதம் சனிக்குது - அமுதம் தோன்றுகிறது. மாயை வெல்லுமோ - உலகியல் மாயை என்னை மயக்குமோ; மயக்காது காண். (56)
|