5028.

     உன்னைக் கண்டு கொண்டேன் கண்ட வுடன் இங்கென்னை யே
          உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
     என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
          யாரும் கண்டுகொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     என்னைக் கண்டுகொண்ட காலத்து - எளியவனாகிய என்னைக் கண்டு அருள் புரிந்த காலத்தில்.

     (66)