5041.

     பனிரண் டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
          படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
     துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற்றே
          துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     படியில் - பூமியில். துனியாது - வெறுப்படையாமல். துரை - தலைவனே.

     (79)