5042.

     ஈரா றாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
          எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
     ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
          இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     ஏராய் - அழகாய்.

     (80)