5053. சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
தவமே புரிந்துநின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
எனக்கும் உனக்கும்
உரை: தவத்தால் உன்னை உணர்ந்த சாந்தர்களாகிய சித்தர்கள் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்கள் செய்ய வல்ல சுத்தராவர் என்பது கருத்து. (91)
|