5190.
தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே. அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
உரை:
அன்பர்கள் கண்டு விரும்பி உண்டு மகிழ்கின்ற இன்பத்தை உடையவனே; அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள தேவர்கள் விரும்பி மகிழ்கின்ற தேவனே. (13)
(13)