5205.

          அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
          அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.

உரை:

     அடியும் முடியும் நடுவும் அறிய அரிய பெரிதாகிய திருவடியே; அடியவர்களுடைய இதயத் தாமரையில் நடனம் புரிகின்ற இறைவனே.

     (28)