5221.

          சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
          தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
          கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
          குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.

உரை:

     சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் - நுகரப்படாது எஞ்சிய தீவினைகள் யாவும் தடுக்குமாறு நெஞ்சில் நிலைக்கின்ற திருவடி. தஞ்சிதமாகும் சஞ்சித பாதம் - தத்தமக்கு நன்மையாகவே முடிய வல்ல தங்கள் தங்கள் ஞான பதங்கள். கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம் எல்லோரும் இன்பமடையும் அழகிய பாதமாகும். குஞ்சித பாதம் - வளைந்த திருவடியே உயிர்களுக்கு நலம் புரிவதாகும்.

     (4)