5222. எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணிய வாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணிய வானே புண்ணிய வானே.
உரை: எண்ணிய நானே - சிவனைத் தியானித்த நானே தியானத்தால் உறுதி உடையவனானேன். நண்ணிய பேறே - எண்ணின படியே நான் பெற்ற சிவபேறுகள் ஆயின. புண்ணியன் ஆனேன். சிவபுண்ணியம் உடையவன் ஆனேன். புண்ணியவானே - புண்ணியவனானேன்; சிவசாமிப்பியன் ஆனேன். (5)
|