117. திருநட மணியே

தாழிசை

5226.

     பசியாத அமுதே பகையாத பதியே
          பகராத நிலையே பறையாத சுகமே
     நசியாத பொருளே நலியாத உறவே
          நடராஜ மணியே நடராஜ மணியே.

உரை:

     பசியாத அமுதே - உண்ணப் பசிக்காத அமுது போன்றவனே. பகராத நிலையே - எடுத்துரைக்க மாட்டாத பரம்பொருளே. பறையாத சுகமே - துன்பம் செய்யாத முதல்வனே. நசியாத பொருளே - கெடாத பொருளே. நலியாத உறவே - வருத்தாத உறவாக இருப்பவனே.

     (1)