5233. அருளுறு வெளியே வெளியுறு பொருளே
அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
மருளறு தெருளே தெருளுறு மொளியே
மறைமுடி மணியே மறைமுடி மணியே.
உரை: வெளியுறு பொருளே - அருட் பெருஞ் சோதி என்னும் ஆகாசத்தில் விளங்குகின்ற பரம்பொருளே. மருளறு பொருளே - மயக்கமற்ற தெளிபொருளே. தெருளுறும் ஒளியே - தெளிவுற்ற ஞான ஒளியே. (8)
|