5247.

     ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
          ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
     நாரிய னேவரனே நாடிய னேபரனே
          ஞான சபாபதியே ஞான சபாபதியே.

உரை:

     அருமையானவனே; ஞான உருவானவனே; வேதியனே; ஒளியுடையவனே; ஆன்மாக்கள் ஒன்றும் இடமானவனே; எல்லார்க்கும் ஆதரவாக இருப்பவனே; குருவானவனே; உமாதேவியைப் பங்கிலே உடையவனே; மேலானவனே; எல்லாராலும் நாடப்படுபவனே; பரம்பொருளே.

     (7)