5264. சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார் எழுவார்என்று புறந்தாரை ஊது.
உரை: வாயால் சொல்லுதற்கரிய சோதி மலைமேல் தூயதாகிய துரியத்தானத்தில் அன்பு தரும் வேதங்களை ஓதுகின்ற எல்லாம் வல்ல சித்தர் நம்மை அடையும் போது இறந்தவர்கள் எழுவார்கள் என்று சங்கு கொண்டு ஊதுவாயாக. (7)
|