5272.

     அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
          அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
     இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
          இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.

உரை:

     அம்பலவாணன் என் அச்சத்தைப் போக்கினான் என்று ஊதுவாயாக; இச்சையும் இன்பத்தையும் அளித்தான் என்று ஊதுவாயாக.

     (4)