5273. என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
உரை: என் உயிரைக் காப்பாற்றினான் என்று ஊதுவாயாக; என் இன்பம் பலித்தது என்று ஊதுவாயாக; பொன்னுருவான மேனியைத் தந்தான் பொற் சபை அப்பன் என்று ஊதுவாயாக. (5)
|