5274.

     சிவமாக்கிக் கொண்டான்என்று ஊதூது சங்கே
          சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
     நவநோக் களித்தான்என்று ஊதூது சங்கே
          நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.

உரை:

     சிற்றம்பலத்துப் பெருமான் என்னைச் சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே; புதிய முறையில் பொருள்களை நோக்கும்படிச் செய்தான் என்று ஊதுவாயாக; நான் அவனானேன் என்று ஊதூது சங்கே.

     (6)