5275.

     நாத முடியான்என்று ஊதூது சங்கே
          ஞான சபையான்என்று ஊதூது சங்கே
     பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
          பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.

உரை:

     நாத தத்துவத்தின் முடிவில் இருக்கின்றான் என்று ஊதுவாயாக; ஞான சபையில் இருக்கின்றான் என்று ஊதுவாயாக; எனக்குத் தன் திருவடியை அளித்தான் என்று ஊதுவாயாக; நான் செய்த பூசை பயன் தந்தது என்று ஊதுவாயாக.

     (7)