5276.

     தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
          சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
     உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
          உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

உரை:

     ஞான சபைக்குத் தலைவனாகிய அவன் என்னுடைய ஞான சபையும் ஆயினான் என்று ஊதுவாயாக; என் மனத்தின்கண் எழுந்த எண்ணங்களைக் கண்டு மகிழ்ந்தான் என்று ஊதுவாயாக; என் மனத்தில் நிலைத்த எண்ணங்களை விரும்பினான் என்று ஊதுவாயாக; என் உள்ளத்தில் நிகழ்ந்தது நிகழ்ந்தபடியே உரைக்கின்றான் என்று சங்கே ஊதுவாயாக.

     (8)