5279.

     கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
          கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
     இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
          எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.

உரை:

     வஞ்சனை ஒழிந்தது என்று ஊதுவாயாக; அறியாமை இருள் ஒழிந்தது என்று ஊதுவாயாக; என் எண்ணமெல்லாம் பலித்தது என்று ஊதுவாயாக.

     (11)