5280. எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
உரை: எல்லாம் செய்ய வல்லவன் என்றும் எல்லார்க்கும் நல்லவன் என்றும் எல்லாம் உடையவன் என்றும் எல்லாமும் ஆனான் என்றும் சங்கே ஊதுவாயாக. (12)
|