5281.

     கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
          கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
     அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
          அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.

உரை:

     கருணையாகிய செல்வத்தை உடையவர் வந்தார் என்று ஊதுவாயாக; கடவுளாகிய அவனே கருணாநிதி என்று ஊதுவாயாக; திருவருள் நாடகத்தை ஆடுபவனே என்று ஊதுவாயாக; அம்பலத்தில் சோதியாக விளங்குபவன் என்று ஊதுவாயாக.

     (13)