5290. தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
உரை: சிவமாகவே நான் ஆயினேன் இது சத்தியம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; என் உடலுக்குள் புகுந்து சிவம் விளங்கிற்று என்றும் அதனால் என் உடல் ஒளி வண்ணமானது என்றும் சின்னம் பிடிப்பீர்களாக. (6)
|