5492.

          அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
          அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
          சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
          உடையான் உளத்தே உவந்து.

உரை:

     சிவந்த சடையை உடையவனும் அம்பலத்தில் ஆடுபவனும் சுயம்பு மூர்த்தியாய் உள்ளவனும் எல்லாம் உடையவனுமாகிய சிவபெருமான். என் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் அப்பா என்று நான் ஒருகால் சொன்ன அளவில் அப்பா மகனே என்று என்னுள் நிறைந்து விடுகின்றேன். எ.று.

     துப்பர் சடை - பவளம்போல் சிவந்த சடை. தானே தானாதல் - சுயம்புவாதல்.

     (6)