பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


1


தாயுமானவடிகள் திருப்பாடல்கள்
[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
    ஆனந்த பூர்த்தியாகி
 அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
    அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
    தழைத்ததெது மனவாக்கினில்
 தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
    தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
    எங்கணும் பெருவழக்காய்
 யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
    என்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
    கருத்திற் கிசைந்தததுவே
 கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
    கருதிஅஞ் சலிசெய்குவாம்.
     (பொருள்) அங்கிங் . . . நிறைந்ததெது - வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள் தொலைவிலுள்ளது (நிலவுலகம், கீழுலகம் ஆகிய) அண்மையிலுள்ளது என்று சுட்டிக் கூறாதவண்ணம், எவ்விடத்திலும் பேரொளியாய், முழு நிறை இன்பமாகி, தன் அறிவாற்றலொடு பிரிப்பின்றி நிறைவாயுள்ளது எந்தப் பொருள்;

     தன்னருள் வெளிக் . . . தழைத்ததெது - தன்னுடைய அருள் வெளியிலே, எல்லா உலகங்களும், நிலைக்குமாறு நேயம்வைத்து; உயிருக்குள் உணர்வாகி விரிந்திருப்பது எந்தப் பொருள்;