பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


128


    இம்மையில் இறைவனை மறவா நினைவுடையார் அம்மை யின்பமும் இம்மையே எய்துவர் :

"மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்
 கம்மையும் இம்மையே யாம்."
- திருவருட்பயன், 69.
(10)
 
திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
    சென்றோடி யாடிவருவீர்
  செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
    திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்
    உழுந்தமிழும் ஆசமனமா
  வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்
    உலகும்அயி ராவதமுமே
கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்
    ககனவட் டத்தையெல்லாம்
  கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்
    காட்டுவீர் மேலும்மேலும்
மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
    விளங்குவரு சித்திஇலிரோ
  வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர்கணமே.
     (பொ - ள்) "திக்கொடு . . . . . . நிற்பீர்" - (திருமூலர் மரபில் வரு மௌன குருவின் வழியினராதலின் சித்தர்கூட்டத்தையும் போற்றுகின்றார்.) திசைகளும் திசைகளின் முடிவுகளும் எட்டுமாறு நொடிப் பொழுதில் மனத்தின் விரைவினும் மிக்க விரைவாகச் சென்று பொருந்த ஓடி விளையாடி மீளுவீர். செம்பொன் வண்ணமாகிய மேரு மலையொடு சிறந்த குண மலையினை ஒன்றுபொருத்துவது போன்றும் துருவ மண்டலத்தினை ஒன்று சேர்ப்பது போன்றும் துருவ மண்டலம் வரை ஒருங்கு கலப்பீர்; கொடுமை மிக்க ஆழிப்படையினைக் (சிவனருளால்) கையிலேந்திய உலகளந்த திருமாலையொத்து நிற்பீர்.

    "கையில் . . . . . . விளையாடுவீர்" - உள்ளங்கையின்கண் ஓர் உழுந்து அமிழும் அளவாக (எல்லாம் அமிழும்) ஆழமிக்க ஏழுகடலையும் ஆக்கி