பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


162


சிவனுவன் செய்தியெல்லாம் என்செய்தி என்றும்
    செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்று கொள்வன் பரிவாற்
    பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே."
- சிவஞானசித்தியார், 10 - நூற்பா.
(10)
 
இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
    எனருசித் திடவலியவந்
 தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர்
    இடையறா துருகிநாடி
உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
    ஓய்ந்துயர்ந் தவசமாகி
  உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
    உணர்வார்கள் உள்ளபடிகாண்
கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங்
    கைக்கொள்வள் பக்குவத்தில்
  கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
    கருதிநகை யாவளதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
    தோற்றிற் சுகாரம்பமாஞ்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "இன்னமுது . . . . . . படிகாண்" - (முதல்வனின் மூவாத் திருவடியின்பம்) (உறுதோறும் உயிர்தளிர்க்கச் செய்யும்) இனிய அமிழ் தொப்பவும், (வாழை மா பலா என்னும்) முக்கனியைப் போலவும் சருக்கரைப் பாகுபோலவும், கற்கண்டெனவும், சீனத்துச் சீனிபோலவும், தேன் போலவும் சுவையுண்டாகும்படி வலிய எழுந்தருளி வந்து திருவடியின்பத்தினைத் தண்ணளியால் ஊட்டியருளிய நின்னை, அவ் வின்பினை நுகர்ந்த நின்மெய்யன்பர், எப்பொழுதும் (உன்னையே) இடையறாது நினைந்து உள்ளம் உருகி, எண்ணி, எண்ணிய உள்ளமும் நெகிழ்வுற்று, சொற்றடுமாறி, உடம்பிளைத்து, நினைவிழந்து, நின்வயப் பட்டு, அறிதற்கரிய பேரின்பநுகர்வுணர்விலே உணர்ந்து இன்பவண்ணமாய் அமர்ந்திருப்பர்; இது மெய்ம்மையாகும்.