மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி | மன்னுமுனி வர்க்கேவலாய் | மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம் | மார்க்கத்தில் நின்றுகொண்டு | கருமருவு காயத்தை நிர்மலம தாகவே | கமலாச னாதிசேர்த்துக் | காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக் | கலைமதியி னூடுதாக்கி | உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல் | உணர்வான விழியைநாடி | ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம் | உற்றிடஎன் மனதின் வண்ணந் | திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ | தேடரிய சத்தாகிஎன் | சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே | தேசோ மயானந்தமே |