பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

311
முறையால் தானாகிநிற்கின்றாய். (நின்நிலைமை மாற்றம் மனங்கழிய நின்றவாய்மைநிலை. அந்நிலையினை அறிந்த வொன்றில் வைத்துக் கூறுவேமாகில்) பேரறிவுப் பேரின்பத் தேனும், ஆன்பாலும், பலவகையான இனிய கனிவகைகளும், செழுமையான கருப்பஞ்சாற்றின் பாகும், கற்கண்டும் சேர்ந்து இன்சுவைத்தாய்த் திகழ்ந்து விளங்குகின்ற ஒரு பொருளே!

     (வி - ம்.) "எனக்கேன் வைத்தாய்" என்னும் வினா பரவை வழக்கமாய் உலகோர் கூறும் கூற்றினை வழிமொழிந்து கூறியதாகும். ஆருயிர்களோடு குற்றவியல்பாய் ஆணவமலம் தொன்மையிலேயே ஒட்டியிருந்தது. அம் மலப்பிணிப்பினை நீக்கும் பொருட்டுத் தொன்மையிலேயேயுள்ள மாயையினின்று முதல்வன் உலகு உடல் உலகியற் பொருள்கள் எல்லாவற்றையும் படைத்து, அவற்றிற்குக் கொடுத்தருளினன். அதுபோல் தொன்மையிலேயேயுள்ள வினையினின்று வினைத்தன்மையினையும் சேர்ப்பித்தருளினன். அம் முதல்வன் இயல்பாகவே மலப்பிணிப்பினின்று நீங்கியவன். அவனுக்கு அடிமையாதலும், அவன் அடியவரோடிணங்கலும், அவன்றன் மெய்யடியார் மொழிந்தருளும் திருமாமறை முறைகளின்வழி ஒல்லும்வகை ஒவாதொழுக வேண்டுவதுமே அம் மலப்பிணிப்பு நீங்குதற்கு வாயில்களாகும். மலப்பிணிப்பு நீங்குநிலையே உயிர்கட்குச் செவ்வி எய்துதல். செவ்வி எய்தவே திருவருள் வீழ்ச்சியாகும். திருவருள் மேல் ஓங்கவே திருவடிப்பேறு கை கூடும். அதுவே மீளா ஆளாய்ப் பேரின்பப் பெருவாழ்வு துய்ப்பதாகும்.

(5)
 
ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை
    உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால்
நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன்
    நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே
என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை
    இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ
கன்றுமனத் துடன் ஆடு தழைதின் றாற்போல்
    கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே.
     (பொ - ள்) "ஒன்றியொன்றி . . . அல்லேன்" - உலகியலிற் காணப்படும் நூல்களில் ஒவ்வொரு நூலிலும் அழுந்தி அழுந்தி அதன்படியொழுகி நிற்பதாலும் கண்டபயன் ஏதுமில்லை; அடியேன் என்னை மறவாது என்னை நினைந்து கொண்டே உன்னையும் நினையும் பொருளாக நீ யாண்டும் காணப்படும் பொருளாக உள்ளவன் அல்லை. உன்பால் அறுபான் மும்மைநாயன்மார் போன்று மிக்கபத்தியினால் அடியேன் உறைத்து நின்று ஒழுகி அத் தன்மையைக் கண்டவர் கனிந்து இரங்கும் படிக்குள்ள அவாவற்ற நிலைமையுடைய வைராக்கியனு மல்லேன்.

     "நிவர்த்தி . . . கலக்குற்றேனே" - உலகியல் வழிகளில் நின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இந்த முழுப் பொய்யனாகிய