பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள் | பக்கமுண் டெக்காலமும் | பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம | படரெனுந் திமிர மணுகாக் | கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு | காயசித் திகளுமுண்டு | கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில் | கருத்தொன்றும் உண்டாகுமேல் | நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர | ஞானஆ னந்தஒளியே | நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே | நானெனும் அகந்தைதீர்த்தென் | மதியுண்ட மதியான மதிவதன வல்லியே | மதுசூ தனன்தங்கையே | வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை | வளர்காத லிப்பெண்உமையே. |