பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

506

ஓதும்படியான மதிநுட்பத்தினையும், அகத்தவமாம் யோகத்தால் கிடைக்கப்பெறும் எண்வகைப் பேறுகளையும் (அட்டமாசித்தி) நல்ல மெய்யடியார்கட்கு அருள்செய்தற் பொருட்டு வெற்றிக்கொடிகளை உற்ற அடையாளமாகக் கொண்டு திகழும் பொன் அன்னம் போன்று விளங்கும் பொற்கொடியே, உலகனைத்தும் ஒருங்கு புகழ்கின்ற திருவானைக்காவி லெழுந்தருளி வீற்றிருக்கும் உலகமுதல்வியே, அடியேனுக்குரிய அம்மையே! பட்டவர்த்தனர் - வேந்தர். நிகளம்-விலங்கு. கமனம் - நடை. மத்தம் - மதம்.

(1)
காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி
    கன்மப் புனற்குளூறுங்
  கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்
    காயத்துள் எனையிருத்திச்
சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்
    துருத்திக்குள் மதுஎன்னவே
  துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்
    தோயநீ பாய்ச்சல்செய்து
நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை
    நாட்டிப் புலப்பட்டியும்
  நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று
    நாடுசிவ போகமான
பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோ
    பெரியஅகி லாண்டகோடி
  பெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவு
    பெரியநா யகியம்மையே.
     (பொ - ள்.) கைகடந்து செல்லும் காற்றினைப் பிடித்து மண் கலயத்தில் அடைத்ததுபோல இருவினை நீரில் ஊறிக்கொண்டிருக்கும், இழிவான ஒன்பது தொளைவாயில்களையுடைய பச்சைமண் கலத்தினை யொத்த இவ்வுடம்பினுள் அடியேனை இருத்தி உண்ணும் சோற்றைப் பெருகத்திணித்து, நீ கட்டிவைக்க, தோலாலாகிய துருத்திக்குள் அடைக்கப்பட்ட வெறியுண்டாக்கும் கள்ளைப்போல, துள்ளித் துடித்து என்ன பேறுபெற்றனை?

     உன்னுடைய திருவருள் நீரினைப் பாய்த்தி, நாறு பதித்தாற் போலத் திருவடியுணர்வாம் நற்பயிரினை நட்டு ஐம்பொறிகளாகிய பட்டிமாடுகளும், நமன் என்று சொல்லப்படும் தீயபூடுகளும் சேராமல்