| திருவருள் ஞானஞ் சிறந்தருள் கொழிக்குங் |
| குருவடி வான குறைவிலா நிறைவே |
| நின்ற ஒன்றே நின்மல வடிவே |
| குன்றாப் பொருளே குணப்பெருங் கடலே |
| 5ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ் |
| சோதியே சத்தே தொலைவிலா முதலே |
| சீர்மலி தெய்வத் திருவரு ளதனால் |
| பார்முத லண்டப் பரப்பெலாம் நிறுவி |
| அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை |
| 10ஏழு பிறவியில் தாழா தோங்கும் |
| அனந்த யோனியில் இனம்பெற மல்க |
| அணுமுத லசல மான ஆக்கையுங் |
| கணமுத லளவிற் கற்ப காலமுங் |
| கன்மப் பகுதித் தொன்மைக் கீடா |
| 15 இமைப்பொழு தேனுந் தமக்கென அறிவிலா |
| ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை |
| எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை |
| இன்ப மெனவே துன்ப மிலையெனப் |
| பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க |
| 20ஆதர வாகக் காதலும் அமைத்திட் |
| டூக மின்றியே தேகம் நானென |
| அறிவு போலறி யாமை இயக்கிக் |
| காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டியே |
| மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் |
| 25மாலற வகுத்தனை ஏலும் வண்ணம் |