பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

702
 
எண்ணிய எண்ணமெல் லாந்தெரிந் தெனக்குத்
 230
தண்ணருள் செய்தவன் தாயு மானவன்
 
ஒருமொழி பகர்ந்த உதவியா லவன்றன்
 
இருபத முப்போ திறைஞ்சிவாழ்த் துவனே.
அருள்வாக்கிய அகவல்
முற்றிற்று.
 
உலகினுக் கணியா மிராமநா தபுரத்
    துயர்நறை வாவியின் குணபால்
மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை
    மருவிமெய் யொருவிவே தாந்தத்
திலகிய பொருளால் வானமாய் நிறைவு
    மெந்தையே எனதுபந் தமும்போய்
நிலையுற நினது திருவரு ளளிப்பாய்
    நின்மலா னந்தமே போற்றி.
துகளறு சாலி வருடமா யிரத்தைஞ்
    ஞற்றொடெண் பத்தொன்று தொடரு
மிகுசுப கிருதாம் வருடந்தை மாதம்
    வெண்மதி வாரநாள் விசாக
மகிமைசேர் பூரணத் திதியினி லருத்த
    மண்டல சமையத்திற் கங்கை
திகழ்கரை யதனிற் றாயுமா னவனார்
    சிவத்தினிற் கலந்தநற் றினமே.