பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


143


கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
    கற்றும்அறி வில்லாதஎன்
  கர்மத்தை யென்சொல்கேன் மதியையென் சொல்லுகேன்
    கைவல்ய ஞானநீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
    நாட்டுவேன் கர்மமொருவன்
  நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று
    நவிலுவேன் வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
    வந்ததா விவகரிப்பேன்
  வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி
    வசனங்கள் சிறிதுபுகல்வேன்
வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த
    வித்தையென் முத்திதருமோ
  வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர்கணமே.
     (பொ - ள்) "கல்லாத . . . நவிலுவேன்" - (பண்பாடின்றி நூலை மட்டுங் கற்றவர்களினும்) கல்லாதவர்களே மிகவும் நல்லவர்களாவர்; நூல்களைக் கற்றும் (கற்றபடியொழுகும்) அறிவில்லாத ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன்: (வினைவழியொழுகும்) அறிவினை என்னவென்று சொல்லுவேன். வீடுபேற்றினை யளிக்கும் மெய்யுணர்வு முறைமைகளை, (திருவருள் கைவந்த செம்பொருட்டுணிவின ரெனப்படும்) நல்லார்கள் நயந்து உரைப்பார்களாயின், அவ்வுணர்வினும் சிறந்தது செய்யும் வினையே முதன்மையானதென்று வலியுறுத்திக் கூறுவேன். மற்றொருவன் வினையே முதன்மை யுள்ளதென்று (பலவாறு கூறி) நாட்டுவானாகில் தொன்மையாகத் தொடர்ந்து வருகின்ற மெய்யுணர்வே முதன்மை யுடையதென்று முன்னின்று நாட்டுவேன்;

    "வடமொழி . . . தருமோ" - வடமொழி வல்லான் ஒருவன் வந்து சொற்போரியற்றின் (திராவிடமெனப்படும்) சிறந்த தமிழ்மொழியிலே வந்துள்ளதெனச் சொற்போரிடுவேன். தமிழறிவு படைத்த வொருவன் வருவனாயின் வடமொழியின் நின்று சில சொற்களைச் சொல்லிவருவேன். (முறையுற எவரையும்) வெல்லுதல் செய்யாது வாயடியடித்து அவர்களை மயக்கஞ்செய்து ஓட்டிவிடும்படியாக அடியேனுக்கு வகைவந்துள்ள பாழ்ங்கல்வி வீடுபேற்றினைத் தருமோ? (தாரா தென்க.)

        "வேதாந்த சித்தர்கணமே"-