முடைநாற்றம் வீசுகின்ற சிறு வீடாகிய இவ்வுடம்பை (உண்மை தெரிந்தார் எவரும் விரும்புவதற்கு மாறாக) அருவருப்பர். அது பொய்யல்லவே?
"இதனை . . . வேண்டிலேன்" - (இத்தகைய இழிவான நிலையில்லாத, இவ்வுடம்பினை மெய்யென்று நம்பி அடியேன் அறிவுசெல்லுமோ? பயனற்று வீணிலே துன்பமாய் அலையவோ? நிலையில்லாத இவ்வுலக வாழ்வைக் கனவிலுங்கூடச் சிறிதும் விரும்புதல் செய்யேன்;
"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -
(வி - ம்.) இரங்கியே - வருந்தியே. அமிர்த சஞ்சீவி - உயிர் கொடுக்கும் மருந்து புன்மை - தாழ்வு. மொய்த்திடும் - நிறைந்திடும். புலை - புலால்; முடை. பாழ் - பயனற்றது; வீண். சொப்பனம் - கனவு. குடில் - சிறு வீடு. அருவருப்பு - வெறுப்பு. புந்தி - புத்தி; பகுத்தறிவு.
உடம்பு எழுவகை முதற்பொருள்களால் ஆக்கப்பட்டது. அவை வருமாறு: 1. சாரம், 2. செந்நீர், 3. ஊன், 4. கொழுப்பு, 5. எலும்பு, 6. மூளை, 7. வெண்ணீர்.
ஆண்டவன் அன்பு தோன்றவேண்டுமென்ற நினைவு ஒரோ வழித் தோன்றியதும் ஆண்டவன் ஆட்கொண்டருளுகின்றனன். இவ்வுண்மை வருமாறு :
| "அன்ப ராகிமற் றருந்தவ முயல்வார் |
| அயனு மாலுமற் றழலுறு மெழுகாம் |
| எண்ப ராய்நினை வாரெ னைப்பலர் |
| நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய் |
| வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை |
| மரக்கண் என்செவி இரும்பினும் வலிது |
| தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா |
| திருப்பெ ருந்துறை மேவிய சிவனே." |
| - 8. செத்திலாப்பத்து. 4. |
உடம்பின் அமைப்பினை வருமாறுணர்க :
| "நிணக்குடர் தோனரம் பென்புசே ராக்கை1 தா னிலாயதன்றால் |
| குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கினாயே |
| வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடேத்தும் |
| அணங்கனா ரூர்தொழுதுய்யலா மையல்கொண் டஞ்சல்நெஞ்சே." |
| - 2. 71 - 3. |
கட்டுறு வாழ்வின் நிலையாமை உணர்ந்தாலன்றி ஒட்டுறு வாழ்வின் நிலைப்புணர்ச்சி தோன்றாது: இவ்வுண்மை வருமாறுணர்க :
1. | 'கால்கொடுத்.' 4. 33 - 4. |