பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

178
    சமயத்தோர் மாறுபாடு வருமாறு :

"சமய வாதிகள் தத்தம் மதங்களில்
 அமைவ தாக அரற்றி மலைந்தனர்."
- 8. போற்றித். 50 - 1.
"ஒன்றது பேரூர் வழியா றதற்குள
 என்றது போல இருமுச் சமயமும்
 நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
 குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே."
- 10. 1533.
"அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
 ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலு - மென்றும்
 ஒருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கும்
 மருதனையே நோக்கி வரும்."
- 11. பட்டினத். திருவிடைமும். 17.
(9)
 
அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ
    அலரிமண டலநடுவிலோ
  அனல்நடுவி லோஅமிர்த மதிநடுவி லோஅன்பர்
    அகமுருகி மலர்கள்தூவித்
தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத்
    திகந்தத்தி லோவெளியிலோ
  திகழ்விந்து நாதநிலை தன்னிலோ வேதாந்த
    சித்தாந்த நிலைதன்னிலோ
கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக்
    கண்டசூ னியமதனிலோ
  காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ
    கருவிகர ணங்களோய்ந்த
தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது
    தொழும்பனேற் குளவுபுகலாய்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "அண்டமுடி . . . நிலையிலோ" - (முதல்வனே நீ எழுந்தருளியிருப்பது) அண்டகோளங்களின் உச்சியிலோ? புற அண்டங்களிலோ, ஞாயிற்று மண்டில நடுவிலோ, தீ மண்டில நடுவிலோ, அமிழ்தம் பொழியும் திங்கள் மண்டில நடுவிலோ, மெய்யன்பர்கள்