பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

239
செவியறிவுறுத்தும் பொருட்டுத் தெற்கு நோக்கிப் பெரிய ஆலமரத்தின் நீழலிலே வீற்றிருந்தருளிக் காட்சியளித் தருளுகின்ற திருவருட் செல்வமே!

         "சத்தாகி . . . ஆனந்தமே"-

     (வி - ம்.) சிலம்பு - காலணி. ஆர்ப்ப - ஒலிப்ப. வீங்கி - பெருத்து. ஆவல் - வேட்கை; விருப்பம். வடம் - பெரிது.

     ஆலமர் செல்வன் அறநால்வர்க் கருளிய வுண்மை வருமாறு:

"சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லராநல் லிதழி
 சழிந்தசென்னிச் சைவவேடந் தாளிணைத்தைம் புலனும்
 அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
 மொழிந்த வாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே."
- 1. 53 - 6.
(10)
 
புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில்
    பொலிவுற இருக்குமியல்பும்
  பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும்
    பூமண்ட லாதிக்கமும்
மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம்
    மாலுமொரு சுட்டும்அறவே
  வைக்கின்ற வைப்பாளன் மௌனதே சிகனென்ன
    வந்தநின் னருள்வழிகாண்
சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே
    சுருதிமுடி வானபொருளே
  சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள்
    சுரந்துபொரு கருணைமுகிலே
சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "புத்தமிர்த . . . அறவே" - திருப்பாற் கடலிற்றோன்றிய புதிய அமிழ்தநுகர்வும், வானவர்கோனுலகில் (வருத்தமின்றி நினைத்ததை நினைத்த அப்பொழுதே வழங்கும்) கற்பக நிழலில் அழகுற வீற்றிருக்கும் சிறந்த நிலையும், அப் பொன்னுலகில் நான்கு