பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

252
எனத் திருவுளங்கொண்டு, இவன் நம்மடிமை இவனைப் புறத்தும் வந்து காத்தருளுதல் வேண்டுமெனக் கைம்மாறில்லா நின் தண்ணளியுளத்துத் தங்கி இருந்ததோ?

         "தெரிவ . . . விலாசமே" -

     (வி - ம்.) நிட்டை - அழுந்தியறியும் அனுபவநிலை.

     மிக்க செல்வம் பேரல்லலைத் தருவது என்பது வருமாறு :

'செல்வமென்னும் அல்லலிற் பிழைத்தும்."
- 8. போற்றித் - 39.
"ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
 காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்-காத்தல்
 குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்
 குறைபதி மற்றைப் பொருள்."
- நாலடியார், 280.
"ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
 கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
 ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
 காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே."
- 10 - 215.
"ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
 தோற்றம் நிலக்குப் பொறை."
- திருக்குறள் - 1003.
"வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித்
 தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும்
 ஊழ்பெறல் அரிது சால உயர்சிவ ஞானத் தாலே
 போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே."
- சிவஞானசித்தியார், 2. 4 - 19.
     ஈத்துவக்கும1 இன்ப அறிவுடையார் செய்வது வருமாறு :

"விண்பொயத னான்மழைவி ழாதொழியி
    னும்விளைவு தான் மிகவுடை
 மண்பொயத னால்வளமி காதொழியி
    னுந்தமது வண்மை வழுவார்
 உண்பகர வாருலகி னூழிபல
    தோறுநிலை யானபதி தான்
 சண்பைநக ரீசனடி தாழுமடி
    யார்தமது தன்மை யதுவே."
-3. 75 - 7.
(7)
 
 1. 
'நன்மையராம்'. 2. 42 - 9.