உலகியற் கல்வியாகிய இலக்கிய இலக்கணங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தோமென்னும் செருக்கால், கேட்போர் மெச்சும்படி விரித்துரைப்பது, பலரோடும் சொற்போரிடுவது முதலியவற்றால் திறமை பெற்றவர்க்குத் திருவடிப் பேரின்பம் வாய்த்து வருமோ? (வாராதென்ப, இறை நூல் கற்றுச் சிவவழிபாடியற்றிவரும் பேரன்பரே பேரின்பம் பெறுவர்.)
(பொ - ள்) நீரை மறைத்துப் பரந்திருக்கும் நீர்ப்பாசியினை விலக்குதற்பொருட்டு, நீரிற் கல்லினை எறிவர். கல்லெறியப்பட்ட இடத்தில் பாசம் அகலும்.
1 ஏனைய இடங்களில் பாசம் அறாதிருக்கும்; பாசம் கலைந்த இடத்தில் நல்ல நீர் நன்றாகக் காணப்படும். அதுபோல் இறை நூல் கற்றுணர்ந்த நல்லோர் திருவருளால் வாய்க்கப்பெற்று அவர்கூறும் மெய்யுணர்வு மொழிகளால் திருவடியுணர்வு கைகூடும்.
(214)
நின்னை யுணர்ந் தோர்கடமை நிந்தித்த பேயறிஞர் | என்ன கதிபெறுவார் எந்தாய் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் நின்திருவடியிணையுணர்ந்த சிவனடியார்களை உண்மையுணராது இகழ்ந்த, பேயனைய கொடியோர், எத்தகைய இருளுலகையடைந்து 2 எவ்வகைய துன்பத்தை யடைவரோ? எந்தையே!
(215)
என்னதுயான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்நின் | சன்னிதியாம் நீபெரிய சாமி பராபரமே. |
(பொ - ள்) என்னது யான் என்னும் புறப்பற்று அகப்பற்றாகிய செருக்குத் திருவருளால் அறப்பெற்றோர் எவ்விடத்திலிருந்து நின் திருவடியினை நோக்கினாலும் அங்கெல்லாம் நின்திருவடியே காணப் படுகின்றது. (யாண்டும் நின்திருமுன்னே உள்ளது.) நீயே மாதேவன்.
(216)
1. | 'பாசிபடு'. சிவஞான சித்தியார், 8. 4 - 3. |
2. | 'ஆண்டான்'. 10. 520. |