| | திருவருள் ஞானஞ் சிறந்தருள் கொழிக்குங் |
| | குருவடி வான குறைவிலா நிறைவே |
| | நின்ற ஒன்றே நின்மல வடிவே |
| | குன்றாப் பொருளே குணப்பெருங் கடலே |
| | 5ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ் |
| | சோதியே சத்தே தொலைவிலா முதலே |
| | சீர்மலி தெய்வத் திருவரு ளதனால் |
| | பார்முத லண்டப் பரப்பெலாம் நிறுவி |
| | அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை |
| | 10ஏழு பிறவியில் தாழா தோங்கும் |
| | அனந்த யோனியில் இனம்பெற மல்க |
| | அணுமுத லசல மான ஆக்கையுங் |
| | கணமுத லளவிற் கற்ப காலமுங் |
| | கன்மப் பகுதித் தொன்மைக் கீடா |
| | 15 இமைப்பொழு தேனுந் தமக்கென அறிவிலா |
| | ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை |
| | எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை |
| | இன்ப மெனவே துன்ப மிலையெனப் |
| | பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க |
| | 20ஆதர வாகக் காதலும் அமைத்திட் |
| | டூக மின்றியே தேகம் நானென |
| | அறிவு போலறி யாமை இயக்கிக் |
| | காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டியே |
| | மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் |
| | 25மாலற வகுத்தனை ஏலும் வண்ணம் |