கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள் | களிம்புதோய் செம்பனையயான் | காண்டக இருக்கநீ ஞானஅனல் மூட்டியே | கனிவுபெற உள்ளுருக்கிப் | பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு | பரிசித்து வேதிசெய்து | பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட | பக்ஷத்தை என்சொல்லுகேன் | அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம் | ஆதியாம் அந்தமீதும் | அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை | யான வர்க ளறிவினூடுந | திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயா னந்தகுருவே. |