பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


138


மேற்கொள்ளும்படி என்றும் பொன்றாத சிவராச யோகச் செல்வராய் வானவர்கோன் முதலாகச் சொல்லப்படும் தேவர்கள் அனைவர்களும், வெற்றியுண்டாகுக, மாறா வெற்றியுண்டாகுக என்று வாழ்த்து மொழியக் கொலுவீற்றிருந்தருளும் நுமது பெருமை (எவர்க்கும்) எடுத்தியம்பி ஏத்த எளிதோ!

        "வேதாந்த . . . சித்தர்கணமே"

     (வி - ம்) கெசம் - யானை. துரகம் - குதிரை - சதுரங்கம் - நால் வகையுறுப்பு. கேள்வி - பணிகேட்டல். கெடி - சீர்த்தி. தலம் - ஆதாரம். இள்ளாக்கு - ஆணை. விசயம் - வெற்றி. எண்ணம் - சித்தம். எழுச்சி - ஆங்காரம். இறுப்பு - புத்தி. மும்மண்டலம் - தீமண்டலம், ஞாயிற்று மண்டலம், திங்கள் மண்டலம்.

தீமண்டலம் - மூலமுதல் கொப்பூழ்வரை
ஞாயிற்றுமண்டலம் - கொப்பூழ் முதல் கண்டம் வரை.
திங்கள்மண்டலம்-கண்டமுதல் புருவநடு வரை.
    ஆறு நிலைகள்; 1. மூலம், 2. கொப்பூழ், 3. மேல்வயிறு 4, நெஞ்சம், 5. மிடறு, 6. புருவநடு.

    (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்ஞேயம்.)

ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
    அகிலத்தின் மிசையுள்ளதோ
  ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
    அடக்கியொரு கணமேனும்யான்
காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்
    கண்மூடி யோடுமூச்சைக்
  கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
    கனலினை எழுப்பநினைவும்
பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்
    போக்கிலே போகவிட்டுப்
  பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான
    புன்மையேன் இன்னம்இன்னம்
வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்
    வெளிப்படத் தோற்றல் வேண்டும்
  வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் கித்தர்கணமே.