"தெரிவ . . . விலாசமே" -
(வி - ம்.) ஐவர்: தொகைக்குறிப்புச் சொல். அவை: மெய், வாய், கண், மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகள். பொறிகள் - இந்திரியங்கள். மர்க்கடம் - குரங்கு. முட்டி - வலுவானபிடி; குரங்குப் பிடி. சவுபானம் - சோபானம் - ஏணிப்படி. கருணை - தண்ணளி. சாரதி - வலவன்.
கடுந்தவ நிலைமையினைப் "புற்றுமாய்மரமாய்" (பக்கம் 104) என்னும் திருமாமறை முடிபுத்திருப்பாட்டினா னுணர்க. மேலும் 16. பட்டினத்துப்பிள்ளையாரருளிய திருவிடை மருதூர் மும்மணிக் கோவைக் கண்-19. "புண்ணிய புராதன" எனத் தொடங்குந் திருப்பாட்டில் "மலர்தலையுலகத்து" என்பது முதல் "சாலவுமொறுப்பர்" என்பது முடியவரும் வரிகள் பதினாறாலும் காணலாம்.
நன்னெறி நற்படி நான்குமே முதல்வன் திருவடிசேர்க்கும் பெருநெறியாம் உண்மை வருமாறு காண்க :
| "பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் |
| ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் |
| மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி |
| ஆணிக் கனகமும் ஒக்குமை யாறன் அடித்தலமே". |
| - 4. 93 - 6 |
ஐம்பொறிகளையும் வேடராக உருவகப்படுத்தும் மெய்ம்மை வருமாறு :
| "மன்னவன்தன் மகன்வேடர் இடத்தே தங்கி |
| வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப் |
| பின்னவனும் என்மகன் நீ யென்றவரிற் பிரித்துப் |
| பெருமையொடுந் தானாக்கிப் பேணு மாபோல் |
| துன்னியஐம் புலவேடர்1 சுழலிற் பட்டுத் |
| துணைவனையும் அறியாது துயருறுந்தொல் லுயிரை |
| மன்னும்அருட் குருவாகி வந்தவரின் நீக்கி |
| மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்." |
| - சிவஞானசித்தியார், எட்டாம் நூற்பா. |
(4)
ஏக மானவுரு வான நீயருளி | னால னேகவுரு வாகியே | எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய | இசையு நாள்வரை யநாள்முதல் | ஆக நாளது வரைக்கு முன்னடிமை | கூடவே சனன மானதோ | அநந்த முண்டுநல சனன மீதிதனுள் | அறிய வேண்டுவன அறியலாம். |
1. | 'ஐம்புலவேடரின்' சிவஞானபோதம், எட்டாம் நூற்பா. |