ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி | அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா | பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப் | பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச் | சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல் | தண்ணகுட்சந் திரமௌலி தடக்கைக் கேற்க | வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும் | வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே. |