ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை | அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல | நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா | நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி | வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி | மௌனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற | சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர் | சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். |