பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


550


மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக்
கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே.
     (பொ - ள்) நின்திருவடியினைத் திருவருட்டுணை கொண்டு கண்ணாரக் கண்டு உளமமைத்த மெய்யடியாரைக் காணநேரும் மெய்யன்பர் மண்ணுலகத்தாராயினும், விண்ணுலகத்தாராயினும் வணங்கி வழிபடா திருப்பரோ? வழிபடுவர் என்பதாம்.

(139)
என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல்
சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே.
     (பொ - ள்) எந்நாளினும் நின்திருவருளினை முற்றாகப் பெற்ற பேரின்பப் பெருந்தவத்தர் திருவருள் முனைப்பாற் சொல்லும் திருவாணைமொழி, செல்லும் செல்லும் திசையனைத்தினும் நன்கு சென்று பயன்தரும்.


(140)
ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே.
     (பொ - ள்) நின்மெய்யடியார்களின் செய்கை தன்னை மறந்து திருவருட் களிப்பு மிகுதியால் ஆடுவதும், அன்பு வடிவாய் நின்று அருந்தமிழ்ப்பாப் பாடுவதும், பேரின்ப நிலையமாக நின்று திருவூர்கடோறும் பதிநடை நடந்து நின்திருவடியினைத் தேடுவதும் ஆகும் என்ப.

(141)
பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்
கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே.
     (பொ - ள்) குறைவற நிறைந்து ததும்பி வழியும் தேவரீர் தண்ணருளை நிறைவாகப் பெற்ற மெய்யடியார்கட்கு நின்திருவடி நாட்டமல்லாமல் உலக நாட்டம் இன்மையால் ஞாயிறு கிழக்கேயல்லாமல் வேறு திசைகளில் தோன்றினாலும் 1 அதனால் அவர்களுக்கு நேரும் கவலை ஏதும் இல்லையன்றோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

    புட்கலம் - நிறைவு.

(142)
பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே
சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே.
     (பொ - ள்) திருவடியுணர்வு கைவரப்பெற்ற நன்னெறி நல்லார் பாலரைப் போன்றும், பேயரைப் போன்றும், பித்தரைப் போன்றும் நிற்பதுதான் நன்னெறியொழுக்கமிக்க சிவவுணர்வினர்க்குரிய திருப் பணியாகும்.

     (வி - ம்) பாலர் பகுத்துணரும் தன்மையின்றிக் கண்ணிற்பட்ட வாறே கண்டு நிற்பர். பேயர் உண்டி, உறக்கம், அச்சம், உடனுறைவு

 
 1. 
'உங்கையிற் பிள்ளை' 8. திருவெம்பாவை. 19. 
 " 
'புண்ணியம்மேல்' சிவஞான சித்தியார், 8 - 2 - 21.