பக்கம் எண் :

New Page 1

170

             காப்புப் பருவம்

    செருத்துணையர் :  இவர் சோழ நாட்டில் தஞ்சாவூரில் வேளாள மரபில் பிறந்தவர்.  சிவபக்தி, சிவன் அடியார் பத்தி நிறைந்தவர்.  திருவாரூர் திருக்கோயிலில் மலர்த்தொண்டு செய்து வந்தவர்.  ஒரு சமயம் கழற்சிங்க மன்னர் (நாயனாரும் ஆவார்) மனைவியார் இறைவர்க்குரிய பூவை எடுத்து மோந்ததால் அவ்வம்மையார் மூக்கை அரிந்தவர்.  பூத்தொண்டு செய்தே முத்தி பெற்றவர்.   “ அருட்கே கருத்துள் நை செருத்துணை“ என்று சிறப்பிக்கப்பட்டதன் குறிப்பு, இவர் இறைவர் திருவருட்கே உள்நைந்தவர் என்பதை அறிவித்தற்காகும்.  இதனைச் சேக்கிழாரும்,

மெய்தருவார் நெறிஅன்றி வேறொன்றும் மேல்அறியாச்
செய்தவராம் செருத்துணையார்

என்று கூறியுள்ளனர்.

    மேலும், இவர் இறைவர் திருவருளிலேயேதோய்ந்திருந்த மையால்தான், இறைவர்க்கென இருந்த மலரை மன்னன் மனைவியார் மோந்ததுகண்டு பொறாராய்,

        கடிது முற்றி மற்றவள்தன் கருமென்
            கூந்தல் பிடித்தார்த்துப்
        படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றி
            “ பரமர் செய்யசடை “ 
        முடியில் ஏறம் திருப்பூமண் டபத்து
            மலர்மோந் திடும்மூக்கைத்
        தடிவன் ;’ என்று கருவியினால் அரிந்தார்
            தலைமைத் தனித்தொண்டர்

    புகழ்த்துணையர் :  இவர் செருவிலிபுத்தூரில் ஆதி சைவ பிராமணர் மரபில் தோன்றியவர். சிவபெருமானை ஆகமப்படி பூசித்தவர்.  பஞ்ச காலத்திலும் பரமனைப் பூசித்து வந்தவர்.  உணவு இன்மையால் உடலும் தளர்ந்தது.  அந்நிலையிலும் இறைவர்க்கு நீர் முழுக்கு ஆட்டும்போது, உடலில் வன்மை இன்மையால் குடம் இறைவர் முடிமீது விழுந்து விட்டது.  அது கண்டு நடுநடுங்கிக் கீழே விழுந்துவிட்டார்.  உறக்கமும் கொண்டார்.  இறைவர் அவர் கனவில்“ தினமும்