தம
தம் பெற்றோர்களையும்,
உற்றார்களையும் வெட்டி வீழ்த்தினார். ஒரு சிறு குழந்தையையும் வெட்டத் துணிந்தபோது, வாயில்
காவலன் தடுத்தான். “ “ இது நெல்லையுண்டவள் பாலைக் குடித்தமையின் இதனையும் வெட்டுதல் தக்கது “
என அதனையும் வெட்டினார். இத்தகைய வீரச் செயல் புரிந்த இவர் சிவன் அருளுக்குப் பாத்திரம்
ஆனார்.
இந்நாயனார் தம்
மன்னனது பகைவருடன் பொருது வெற்றி கொண்டதால், வயம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டார்.
இவரைச் சேக்கிழார் “ தனி வீரராம் தலைவர் “ என்றும் “ வேற்றுப்புலம் பெருகத்துயர்
விளைப்பப் போர் விளைத்துப் புகழ் விளைப்பார் “ என்றும் கூறியுள்ளனர். மேலும், இந்நாயனார்
வேளாளர் மரபில் புலிபோலத் துலங்கினமையின், “ வேட்புலி எனும் கோட்புலி “ எனப்பட்டார்.
இவர் அக்குடியில் சிறந்து விளங்கியதால், சேக்கிழார், “ நாட்டியத்தான் குடி வேளாண் குலம்
பெருக வந்துதித்தார் “ என்கிறார். மற்றும் இவர் தம் உறவினர்களை வெட்டி வீழ்த்தியும் கூட
இறைவன் இவரை விரும்பி, அன்பர் எதிர் வெளியே நின்று, “உன்னுடைய கைவாளால் உறுபாசம் அறுத்த
கிளை பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் புகழோய் நீ இந்நிலை நம் உடன் அணைக “ என்று கூறி
இருப்பதால், இவர் வேட்புலி என்று சிறப்பித்தற்கும் உரியர் ஆயினார். திரு என்னும் சொல்,
“கண்டரால் விரும்பப்படும் தன்மை “ என்று பொருள் படுதலின், இவர் உறவினர்களைத் தடித்த நிலையிலும்,
எவராலும் விரும்பப்படுபவரே என்ற கருத்தில் திருக்கோட்புலி எனப்பட்டார்.
சேக்கிழார்,
“ சிங்கர் கழலிணை தொழுது போற்றி, என்றும், இடங்கழியார் கழல் வணங்கி என்றும், “ செருத்துணையார்
தூயகழல் இறைஞ்சி “ என்றும், புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி என்றும், கோட்புலியார்அடி வணங்கி “
என்றும் வணங்கி இருத்தலின், அம்மரபுபடி திரு பிள்ளை அவர்களும் “ ஐவரையும் மேல்மேலும் ஏத்தெடுப்பாம் “
என்றனர்.
(9)
|